பக்கங்கள்

12 டிசம்பர் 2012

கரும்புள்ளிகளை நீக்க உதவும் எலுமிச்சை!

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை ஸ்கரப்:
இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப்:
கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு:
இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்திய பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

04 டிசம்பர் 2012

சருமம் பொலிவு பெற வேண்டுமா....?

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு எப்போதும் தொந்தரவு இருக்கும். ஏனெனில் அப்போது சருமத்தில் ஒருவித கோடுகள் போன்ற தோற்றம் தெரியும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுவதோடு, அசிங்கமாக இருக்கும். மேலும் அந்த வறட்சியை போக்குவதற்காக சிறிது ஆலிவ் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தாலும், சருமம் அதிக எண்ணெய் பசையுடன் காணப்படும். இதனால் தான் இதற்கு மேக்-கப் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது. ஏனெனில் மேக்-கப் செய்வதால், அத்தகைய வறட்சியை போக்கலாம். சரி, இப்போது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான மேக்-கப் டிப்ஸ் என்னவென்று பார்ப்போமா!!! *எந்த வகையான சருமம் இருந்தாலும், மேக்-கப் போடுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அதேப் போல் மேக்-கப்பை இரவில் படுக்கும் முன்பும் நீக்கிவிட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சரும செல்கள் எளிதில் மூச்சுவிட முடியும். இல்லையெனில் மேக்-கப் போடுவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் சரும செல்களை பாதிக்கும். *மேக்-கப் போடுவதற்கு 10-20 நிமிடத்திற்கு முன், கிளின்சிங் மில்க் வைத்து கிளின்ஸ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். பின்னர் கிளின்ஸ் செய்து காய வைத்தப் பின்னர், சிறிது நேரம் கழித்து, மேக்-கப் போட வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி எண்ணெய் பசையுடன் இருக்கும். *மேக்-கப் டிப்ஸில் வறட்சியை நீக்க சிறந்த வழி என்னவென்றால், அது ஃபௌண்டேஷனுடன் சிறிது மாய்ச்சுரைசரை சேர்த்து கலந்து தடவியப் பின், மேக்-கப் போட வேண்டும். ஒரு வேளை கிளின்சிங் மில்க் வைத்து செய்துவிட்டால், அதிகமான அளவில் மாய்ச்சுரைசரை ஃபௌண்டேஷனுடன் சேர்க்க கூடாது. *வறட்சியான சருமம் இருந்தால், கன்சீலரை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமெனில் அப்போது, ஃபௌண்டேசனை விட லைட்டான நிறத்தல் இருக்கும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும். *மேக்-கப் போடுவதற்கு முன் ஜெல் பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீமி ப்ளஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதிலும் மிகவும் லேசான நிறத்தில் கன்னங்களில் அவற்றை தடவ வேண்டும். *எப்போது சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதோ, அப்போது சருமத்திற்கு எந்த ஒரு பவுடரையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை மேலும் சருமத்தை அசிங்கமாக காண்பிக்கும். ஒரு வேளை மாய்ச்சுரைசர் வேலை செய்யவில்லை என்றால், அப்போது மிகவும் லேசாக மேக்-கப் போட்டாலே போதுமானது. இவையே வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான சில மேக்-கப் டிப்ஸ்.