பக்கங்கள்

30 ஆகஸ்ட் 2010

கவர்ச்சியாக நடிக்கத் தயார்: ஸ்ருதி.



கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ருதி தெரிவித்தார்.
சமர்த்தாக பெங்களூரில் பி.காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி சினிமா உலகின் புதிய சிங்கார நாயகி. காதலர் குடியிருப்பு (முன்பு காவலர் குடியிருப்பு என பெயர்) என்ற படத்தின் நாயகிதான் இந்த ஸ்வீட் ஸ்ருதி.
வந்த வேகத்தில் தமிழ், கன்னடம், மலையாளத்தில் புகுந்து புறப்பட்டிருக்கிறார் ஸ்ருதி. கன்னடத்தில் சோனு என்ற பெயரில் நடிக்கிறாராம். தமிழில் மட்டும் ஸ்ருதிதானாம்.
ஸ்ருதி கூறியதாவது: எனக்கென்று எந்த கட்டுப்பாடும் இல்லை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஹோம்லியாகவும் நடிப்பேன். இப்படித்தான் நடிப்பேன் என்று தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். அதேசமயம், அதீத கவர்ச்சி எனக்கு ஆகாது என்கிறார் சற்றே தெளிவாக.
ஆனால் ஹோம்லியாக நடிப்பதுதான் எளிதானது. கவர்ச்சிகரமாக நடிப்பது எல்லோருக்கும் சரியாக வராது, சவாலானது அது என்றார் அவர்.

28 ஆகஸ்ட் 2010

போதை கும்பலுடன் மதுஷாலினி, சார்மியும் தொடர்பாம்?


போதை மருந்து கடத்தல் கும்பலிடம் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்த நடிகர் நடிகைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் போலீஸார் விசாரணையில், த்ரிஷாவின் தொடர்புகள் குறித்து திடுக்கிடும் தகவல்களை கைதானவர்கள் கூறியிருக்கிறார்களாம்.
குறிப்பாக ரவிதேஜாவின் சகோதரர்கள் இதுகுறித்து முக்கிய தகவல்களைக் கூறியிருப்பதாகத் தெரிகிறது. த்ரிஷாவும் ரவிதேஜாவும் 3 படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்துள்ளனர். ரவிதேஜாவுக்கும் போதைப் பழக்கம் உண்டு என்று அவரது தம்பிகள் வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இப்போது பிரபல நடிகைகள் காம்னா ஜெத்மலானி, மதுஷாலினி, சார்மி, உதய்கிரண், தமிழின் பிரபல வில்லன்- குணச்சித்திர நடிகர், வம்புப் பார்ட்டி என 20க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர் நடிகைகளின் பெயர்களை கைதாகியுள்ள ரவிதேஜாவின் தம்பிகள் மற்றும் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள சாய்ரா பானு தெரிவித்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல்காரனான நைஜீரிய வாலிபர் விக்டர் மொபைலில் இவர்களின் செல்போன் நம்பர் இருந்துள்ளது. இவர்களில் திரிஷா மட்டுமே மறுப்பு வெளியிட்டுள்ளார். தனக்கு போதை பழக்கம் கிடையாது என்றும் தன்னுடைய இமேஜை கெடுக்க திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.

24 ஆகஸ்ட் 2010

நைஜீரிய போதை வாலிபருடன் த்ரிஷாவுக்கும் தொடர்பாம்.



ஆந்திரா படவுலகில் போதை மருந்து புழக்கம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பிடிபட்ட நபரிடம் நடிகை த்ரிஷாவின் செல்போ எண்ணும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த செய்திகளால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமாகிளமென்ட் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போதை பொருள் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுபாபு, பரத்வாஜ் இருவரும் கைதாகினர்.
இவர்கள் இருவரும் மட்டுமல்லாது ஆந்திர திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு போதை பொருள் ஆசாமியான விக்டரிடம் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவனுடைய செல்போனில் நிறைய நடிகர், நடிகைகளின் செல்போன் எண்கள் உள்ளன. அதில் த்ரிஷாவின் எண்ணும் உள்ளது.
இது பற்றிய செய்தியால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டு அறிக்கை வருமாறு:
'போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.
நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்புபடுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்னைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்துவது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்.
எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்' என்று கூறியுள்ளார் த்ரிஷா.

19 ஆகஸ்ட் 2010

20 வயதுக்கும் 40 வயதுக்கும் காதல்,தற்கொலையில் முடிந்தது!


இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் சாவு. 20 வயது மாணவனுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த 40 வயதுப் பெண், அந்த மாணவன் கட்டாயப்படுத்தி கற்பழித்து, அதை பலரிடமும் சொன்னதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி அபிராமி சுந்தரி (40). இவர்கள் குறிஞ்சி நகர் 10-வது குறுக்கு தெருவில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.இவர்களது கடைக்கு எதிரே வசிக்கும் பாலிடெக்னிக் மாணவரான விஜயக்குமாருக்கும் அபிராமிசுந்தரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பைப் பயன்படுத்தி அபிராமிசுந்தரியை விஜயகுமார் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டாராம்.அத்தோடு தான் அபிராமி சுந்தரியுடன் உறவு கொண்டதை தனது நண்பர்களிடமும் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவரை அடைய முயன்றுள்ளார். இதனால் அவமானம் அடைந்த அபிராமி சுந்தரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாவதற்கு முன்பு அபிராமி சுந்தரி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், என்னுடைய சாவிற்கு நான் கடை வைத்திருக்கும் எதிர் வீட்டில் உள்ளவர்கள் தான் காரணம். என்னுடைய மானம் போனதற்கு அவர்களுடைய மகன்தான் காரணம். அவனால்தான் இந்த முடிவிற்கு வந்தேன். என்னை வலுகட்டாயமாக பலவந்தபடுத்தி கெடுத்து விட்டான்.வெளியில் சொன்னால் உன்னுடைய மானம்தான் போகும் என்று கூறியே என்னை பலவந்தபடுத்தி கெடுத்துவிட்டான். அவனுக்கு நீங்கள் தான் சட்டபடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.பின்னர் தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில், அன்புள்ள என்னுடைய கணவருக்கு நான் உங்களிடம் கூறாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நான் போனபிறகு என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுங்கள். என்னை மறுபடியும் மன்னியுங்கள் என்று கூறியுள்ளார்.புகார் பதிவு செய்த போலீஸார் விஜயக்குமாரைக் கைது செய்து, அபிராமி சுந்தரியை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

13 ஆகஸ்ட் 2010

குழந்தைக்கு பால் கொடுத்ததால் வந்தது விபரீதம்.


லாரன் மேகேன்னா , 22 வயது இளம்பெண். தன்னுடைய ஆறு வாரக் குழந்தையுடன் பிரித்தானிய பேருந்தில் பயணம் செய்துள்ளார். குழந்தைக்கு பால் கொடுத்ததால் பாதி வழியில் ஓட்டுனரால் இறக்கி விடப்பட்டதாகவும் குழந்தையுடன் ஒரு மைல் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த தவறை செய்ததற்காக பேருந்தின் ஓட்டுனர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த பெண்ணின் குற்றச்சாட்டை ஓட்டுனரும் பேருந்து நிர்வாகமும் மறுத்துள்ளன.
தங்கள் நிறுவன ஓட்டுனர்கள் பயணிகளிடம் பேசுவதில்லை என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதொடு அங்கிருந்த சி.சி.டி.வி காமெராவில் இந்த பெண் கூறும்படியான எந்த வாக்குவாதமும் நடைபெற்று இறக்கி விடப்பட்டதாக பதிவாகவில்லை எனவும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் இது போன்று எந்த ஓட்டுனர் பயணிகளிடம் பேசியது தெரிய வந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிருவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளதோடு இந்தப் பெண் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
தான் ஏன் பொய் பேச வேண்டும் இந்த விடயத்தில் பொய் பேசுவதால் தனக்கு ஏதும் ஆதாயம் கிடைக்கப் போவதில்லை என்று வாதம் செய்கிறார் அந்தப் பெண்.

10 ஆகஸ்ட் 2010

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி மானபங்கம்!


வேறு சாதி வாலிபரை காதலித்ததால், ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி, 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சிïட்டும் கொடூர சம்பவம், மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் சூரி பகுதியில் உள்ள செல்போன்களில், `ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மானபங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசி பெண், வேறு சாதி வாலிபரை காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த கொடூர காட்சியை அரங்கேற்றி உள்ளனர். ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின்னால் கூச்சலிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்த பெண்ணை விரட்டி வந்தனர். சில சிறுவர்கள் அந்த பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடைபெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டினார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த கோரக்காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது. 4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத சுட்டெரிக்கும் வெயிலில் கொடூரமான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந்தாலும், தற்போது செல்போனில் பரவியபின்னர்தான் அதுபற்றி வெளியே தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக சூரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த காட்சி பற்றி நிருபர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். அந்த இளம்பெண் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்ற விவரம் கூட உடனடியாக தெரியவில்லை. செல்போன் படத்தில் தெரியும் கிராமங்களின் அடையாளத்தை வைத்து போலீசார் ஓரளவுக்கு துப்பு துலக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

01 ஆகஸ்ட் 2010

கணவர் வீட்டார் தரக்குறைவாக நடத்தினர்.



"கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர்" என்று நடிகை காவ்யா மாதவன் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகை காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன்பின், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து காவ்யா, எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- "கணவர் வீட்டார் என்னை தரக்குறைவாக நடத்தினர். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். என்னை ஒரு வேலைக்காரி போல நடத்தினர். வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்கள். திரைப்படத்துறையில் பிரபலமானவர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார்கள். என்னை மிருகத்தைப்போல எண்ணி நரக வேதனை அடைய செய்தார்கள். அதைத்தொடர்ந்துதான் நான் விவாகரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்''. இவ்வாறு காவ்யா மாதவன் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு கோர்ட்டு ஏற்றுக்கொண்டு, நிஷால் சந்திராவுக்கு செப்டம்பர் 22-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.