பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2013

ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்ற பெண்!

பிரிட்டனை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சுகபிரசவத்தில் 6 கிலோவில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த பெண், ஸ்பெயின் நாட்டு மருத்துவமனையில், ஆறு கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்தார். பிரிட்டனை சேர்ந்தவர் மரின், 40. இவர் தற்போது ஸ்பெயின் நாட்டில் வசிக்கிறார். கர்ப்பிணியான, மரினுக்கு, நேற்று முன்தினம், பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, டெனியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலி தெரியாமல் இருக்கும் ஊசி ஏதும் இவருக்கு போடப்படவில்லை. ஐந்து மணி நேரத்தில், அழகான, ஆறு கிலோ எடை கொண்ட, பெண் குழந்தையை, மரின் பெற்றெடுத்தார். இவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சேவியர் ரியூஸ் குறிப்பிடுகையில், ""என்னுடைய, 40 ஆண்டு கால மருத்துவப் பணியில், இவ்வளவு பெரிய குழந்தையை பார்த்ததில்லை; தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்,'' என்றார்.