பக்கங்கள்

14 பிப்ரவரி 2012

சொக்லேட் சாப்பிடுங்க இளமையுடன் இருங்க.

நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம்.
சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இளமை தோற்றம்:
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப்பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில்லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன்சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இளமையான தோற்றத்தைப் பெறமுடியும்.
மனதை சுறுசுறுப்பாக்கும்:
சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்டஸ் வயதாவதை தடுப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சதவிகிதம் வரை குறைக்கிறது.
இதில் உள்ள செரோடோனின் என்ற மூலப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் டார்க் சாக்லேட்டிற்கு உண்டு.
கோகோவின் நன்மைகள்
சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவில் காணப்படும் பாலிஃபினைல், நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த குணநலன்கள் எல்லாம் சாதா சாக்லேட்டில் கிடையாது.
75 சதவிகிதம் கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டில் மட்டுமே இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை உட்கொள்வது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

04 பிப்ரவரி 2012

கைபேசியில் சதா பேசும் கர்ப்பிணிகளுக்கு முரட்டுப்பிள்ளை பிறக்கும்!

கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள் நலனுக்கும், மொபைல்போனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது.
முரட்டுத்தனம் அதிகரிப்பு
ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளதாக ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியுள்ளார். இதனை அந்த குழந்தைகளில் பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் மொபைல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் ஆய்வாளர் லீகா கூறியுள்ளார்.