பக்கங்கள்

22 பிப்ரவரி 2020

ஒற்றை தலைவலியை போக்க சிறந்த யோகாசனம்!

பிரம்மரி பிராணயாமம் என்றால் என்ன?உடலில் உண்டாகும் எந்த ஒரு கோளாறையும் போக்கும் சிகிச்சை முறைகளாக யோகா மற்றும் தியானம் என்னும் இரண்டு சக்திமிக்க உடற்பயிற்சிகள் போற்றப்படுகின்றன. அதில் பிரம்மரி பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி தேனீக்களின் ரீங்காரத்தை ஒத்த நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது சுவாசம் தொடர்பான கோளாறுகளை மட்டும் அல்ல ஒற்றைத் தலைவலியையும் போக்க உதவுகிறது.ஒற்றைத் தலைவலி என்பது ஒரு வகை தலைவலியாகும். சோர்வு, குமட்டல், வாந்தி, லேசான உணர்திறன் போன்ற பாதிப்புகளுடன் இணைந்து இந்த வலி உண்டாகிறது. சில நேரங்களில் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இந்த வலி சில நேரங்களில் தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கலாம். ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க மைக்ரேய்ன் பவுண்டேஷன் தெரிவிக்கிறது. 10 முதல் 40 வயதில் உள்ளவர்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு பல்வேறு சுகாதார நிலைகள் காரணமாக உள்ளன. மனச்சோர்வு, உடல் சோர்வு, மனஅழுத்தம், எரிச்சல் உணர்வு, பருவநிலை மாற்றம், உணவு, உணவு அருந்தாமல் தவறவிடுவது மற்றும் இதர நிலைகள் ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் நிலைகளாகும். இதற்கு சரியான சிகிச்சை இல்லை. ஆனால் யோகா மூலம் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும். மனதை உடனடியாக அமைதிப்படுத்தும் ஒரு சிறந்த வழி பிரம்மரி பிராணயாமம் என்று யோகா ஆசிரியர்கள் நம்புகின்றனர். மூச்சுப்பயிற்சிகள் மூலம் கோபம், விரக்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது, மனஅழுத்தம் போன்றவற்றை மனதில் இருந்து விரட்டுவது போன்றவை சாத்தியமாகிறது.பிரம்மரி பிராணயாமம் அல்லது தேனீக்களின் சுவாசம் என்பது ஒரு மூச்சுப்பயிற்சி ஆகும். தேனீக்களின் ரீங்காரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாக பிரம்மரி பிராணயாமம் உள்ளது. பதட்டம், கோபம், மனஅழுத்தம் போன்றவற்றை நிர்வகிக்க இந்த பயிற்சி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. வீட்டில், அலுவலகத்தில் என்று எந்த இடத்திலும் இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள முடியும். இதனால் மனம் அமைதி அடைகிறது. இந்த வகை பிராணயாம பயிற்சியில், மூச்சை வெளியிடும் போது தேனீக்களின் ரீங்காரம் போன்ற சப்தம் எழுப்பப்படுவதால் இந்த பயிற்சி பிரம்மரி பிராணயாமம் என்று வழங்கப்படுகிறது. பிரம்மரி என்பது சக்தி தேவியின் மற்றொரு பெயராகும். பிரம்மரி என்பதற்கு "தேனீக்களின் கடவுள்" என்று பொருள்.வாழும் கலையின்படி, இந்த மூச்சுப்பயிற்சி மூளை மற்றும் நெற்றியைச் சுற்றியுள்ள நரம்புகளின் வலியைக் குறைக்க உதவுகிறது. ரீங்கார ஒலியின் அதிர்வு காரணமாக முழு மனதிற்கும், உடலுக்கும் ஒருவித அமைதி கிடைக்கிறது.

1. ஒரு அமைதியான சூழலில் சுகாசன நிலையில் ரிலாக்ஸாக அமருங்கள்.
2. இரு கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்து, அந்த அமைதியான சூழலை அனுபவியுங்கள். கன்னம் மற்றும் காதை இணைக்கும் குருத்தெலும்பு பகுதியில் உங்கள் ஆட்காட்டி விரலை வைத்துக் கொள்ளுங்கள்.
3. ஆழமாக மூச்சை இழுத்து காது குருத்தெலும்பு பகுதியை அழுத்தி மூச்சை வெளியில் விடுங்கள். மூச்சை வெளியில் விடும்போது உங்கள் வாயை மூடியபடி "ம்" என்ற ஒலியை எழுப்புங்கள்.
4. உங்கள் காதுகளின் குருத்தெலும்பு பகுதியை மிகவும் கடினமாக அழுத்த வேண்டாம்.
5. "ம்" என்ற ஒலியை முடிந்த அளவு சத்தமாக எழுப்பவும்.
6. இதே முறையை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்யவும்.

1. ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு சிறந்த நன்மையைத் தரும் இந்த பயிற்சி.
2. பிரம்மரி பிராணயாமம் பதட்டம், கோபம், ஆச்சர்யம், விரக்தி மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்குகிறது.
3. ஹைப்பர் டென்சன் அல்லது உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் இந்த பயிற்சியால் நன்மை அடையலாம். அவர்களின் இரத்த அழுத்த நிலை வழக்கமான அளவை அடைய உதவும்.
4. உங்களுக்கு காய்ச்சல் அல்லது தலைவலி இருந்தால் இந்த பயிற்சியை செய்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
5. இந்தப் பயிற்சி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
6. உங்கள் மனது அமைதியாகும்.இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது, உங்கள் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தில் எந்த ஒரு அழுத்தத்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
3-4 முறைகளுக்கு மேல் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம். மூச்சுப்பயிற்சி செய்வதற்கு முன்னர் யோகா நிபுணரிடம் ஆலோசனை கேட்டு இதனைத் தொடங்கலாம்.

19 பிப்ரவரி 2020

வெங்காயத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க:
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் உதவுகிறது.

உடல் வெப்பம்: 
பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

விஷக் கடிக்கு:
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலை போக்க: 
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளை: 
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

சாதாரண தலைவலிக்கு:
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

பல்வலி, ஈறு வலி:
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

28 நவம்பர் 2019

தக்காளியின் பயன்கள்!

Bildergebnis für tomaten"தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆண்கள் தினமும் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும். தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது. கைகளில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும். தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகின்றது. அதுமட்டும் இல்லாமல் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது.

21 மார்ச் 2019

இரவில் நேரம் பிந்தி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

செரிமானம் ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேளை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை... இவைகள் தான் மனித உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறவை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உணவு தான் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும். நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.அந்த வகையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு இரவு உணவை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணத்தையும், ஏன் அவ்வாறு சாப்பிட கூடாது என்பதையும் இந்த பதிவில் அறியலாம்.பொதுவாக இரவு நேர உணவை மிக விரைவிலே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதாவது, இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு சில காரணிகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உணவு சுழற்சி தான். அந்தந்த நேரத்திற்கு நாம் உணவை சாப்பிடவில்லை என்றால் அது முழு உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.இரவு 7 மணிக்கு மேல் உணவை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உண்டாகும். மிக விரைவிலே செரிமானம் அடைவதற்கு 7 மணிக்கு முன்னதாக உணவை சாப்பிடுதல் நல்லது. அத்துடன் முழு கலோரிகளும் நமது உடலுக்கு கிடைக்கும்.இரவில் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அவை நமது இதய ஆரோக்கியத்தை பாதித்து விடும். அத்துடன் வயிற்று உப்பசம், வாயு தொல்லை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும். எனவே, இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இந்த பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு தர கூடும்.இரவில் மிக தாமதமாக உணவை சாப்பிடுவோருக்கு பல பாதிப்புகள் உண்டாகும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை மார்பக புற்றுநோயின் பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை பாதிப்பு உருவாகுதல். இதனை தடுக்க இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை உட்கொள்ளுங்கள்.தூங்குவதற்கு முன்னர் சிறப்பான சம்பவத்தை சாப்பாட்டில் செய்து விட்டு தூங்கினால் ஆபத்து நமக்கு தான். ஆகையால் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், 7 மணிக்குள் சாப்பிட்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும்.இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மூளை விழித்திருக்கும் நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஹார்மோன் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் சிலருக்கு சீரற்ற முறையில் உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கும்.இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டால் உடல் பருமனாகாது. நேரம் கடந்து சாப்பிடுவதால் உடல் எடை அபரிமிதமாக கூட தொடங்கி விடும். இது நாளுக்கு நாள் உயர்ந்து இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கி விடும்.

14 ஜூன் 2018

முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள்!

முருங்கை மரத்தின் இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். இதையும் படியுங்கள்: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் வழிமுறைகள்...! முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.

15 ஏப்ரல் 2018

தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் நன்மைகள் கிடைக்கிறது!

Coconut oilதேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. தேங்காய் எண்ணெயை தினமும் இரவில் தூங்கும் முன் தொப்புளில் வைப்பதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். 

தேங்காய் எண்ணெய்யில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.

உடலின் வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவும். 

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

சளி தொல்லையில் இருந்து விடுபட உதவும்.

அடிவயிற்று வலியில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

முக்கியமாக மாதவிடாய காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

கண்களில் ஏற்படும் வறட்சியை சரிசெய்யும் மற்றும் மோசமான கண் பார்வையைத் தடுக்கும்.

இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். 

23 மார்ச் 2018

தலைமுடியை பாதுகாக்கும் சீயாக்காய்!

Bildergebnis für சீயக்காய்!சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த சுத்திகரிப்பான் கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது. கண்டிஷனர் தேவையில்லை உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும். முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும்.பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.