பக்கங்கள்

16 மார்ச் 2017

சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவும் அன்னாசிப்பழம்!

அன்னாசி பழத்தில் வைட்டமின் 'பி' உள்ளதால் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதில் இருந்து விடுபடலாம். மேலும், அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.அன்னாசிப் பழம் குடலில் உள்ள கெட்ட கிருமிகள் மற்றும் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதில், கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அன்னாசிப் பழம் சளி மற்றும் காய்ச்சலைக் கூட குணப்படுத்த வல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கூட சரி செய்கிறது.

08 மார்ச் 2017

குடற்புண்ணை ஆற்றும் திராட்சை!

ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்கள் உண்டு.உடல் வறட்சி, மூளை நரம்புகள் வலுபெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக குடித்து வர இதயம் பலப்படும். படபடப்பு நீங்கும். உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீருவதுடன் நாவறட்சி மற்றும் மயக்கமும் நீங்கும். திராட்சையால் குடல்புண் ஆறும். கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாக பிளந்து எடுத்து, சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறிநீரகக் கோளாறுகள் குணமாகும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும். கருப்பு திராட்சை பழச்சாறு 200 மி.லி. தினமும் இரண்டு வேளை அருந்தி வர, அதிகபடியான கொழுப்புச் சத்து குறையும்.திராட்சை நல்ல உறக்கத்தை தருவதுடன், ரத்த சோகையை போக்கும் தன்மை உடையது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்வதுடன் காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர அந்த நோயின் தன்மை குறையும்.