பக்கங்கள்

27 மார்ச் 2013

முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்க!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் வீட்டிலேயே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் ஒருசில செயல்களை மற்றும் உணவுகளை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும். சரி, இப்போது அந்த மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் பின்பற்ற வேண்டுமென்று பார்ப்போமா!!! * சீஸ் உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் சாப்பிட்டால், அவை உடலில் ஒருவித அழற்சியை உண்டாக்கி, இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். * பொதுவாக கர்ப்பத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்கு வலிமையோடு இருக்காது. ஆகவே அப்போது உடலில் அதிகப்படியாக அசைந்தாலோ அல்லது குலுங்கினாலோ, அவை கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். * ஜங்க் உணவுகள் சாப்பிடக்கூடாது. அவையும் கருச்சிதைவை உண்டாக்கும். ஆகவே நல்ல பழங்கள் மற்றும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலையும், வயிற்றில் இருக்கும் சிசுவையும் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கலாம். * சில நேரங்களில் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருப்பது தெரியாது. ஆகவே கர்ப்பமாவதற்கு முயற்சிக்கும் போது, காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காபியில் உள்ள காப்ஃபைன் கருச்சிதைவை உண்டாக்கும். எனவே குழந்தையை நன்கு பெற்றெடுக்க வேண்டுமெனில் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும். * கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக கோபமோ அல்லது மனஅழுத்தமோ அடையக் கூடாது. ஏனெனில் அவ்வாறு மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் ஒருவித இறுக்கத்தை ஒருவாக்கி, கருவிற்கு அழிவை ஏற்படுத்தும். எனவே எந்த அளவு மன அழுத்தத்தை தவிர்த்து சந்தோஷமாக இருக்க முடியுமோ, அந்த அளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். இவையே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் எளிமையான இயற்கை வழிகள்.

17 மார்ச் 2013

முதுகெலும்பு பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுபடலாம்?

All parts of the body from the brain to the nerves in the The spine are all going through. Compression of the The spine, nerves near   stress high vibrations during the attacks.மூளையில் இருந்து உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் யாவும் முதுகெலும்பு வழியாக செல்கின்றன. இந்த முதுகெலும்பு அழுத்தப்படும் போது, அதிக அதிர்வுகளால் தாக்கப்படும் போது அதன் அருகே உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. அப்போது அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு உண்டாகிறது. இதை தவிர்க்க நிமிர்ந்த நிலையில் அமர வேண்டும். வாகனங்களில் செல்லும் போது (அது இரண்டு சக்கரமோ, நான்கு சக்கரமோ) அதிகப்படியான அதிர்வுகள் முதுகெலும்புப் பகுதியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக எடையை முதுகை வளைத்துக்கொண்டு தூக்குவதும், அதிக சுமைகளை தூக்குவதும் பாதிப்பை உண்டாக்கும். முதுகுவலி வந்தால். பின்னால் சகல தொல்லைகளும் தொடரும். எனவே வீட்டிலோ, வாகனத்திலோ, அலுவலகத்திலோ நாம் அதிக நேரம் அமரும் இருக்கைகள் நம் முதுகெலும்பை வளைக்காமல் சுகமாக, நேராக, அமர உதவுவதாக இருக்க வேண்டும். நம் உடலமைப்புக்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். முதுகெலும்பை சிறப்பாக பராமரிக்க பின்பக்கமாக வளையக்கூடிய புஜங்காசனம், தனுராசனம், சக்கராசனம், முன்பக்கமாக வளையக்கூடிய பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், முதுகை திருக்கக்கூடிய அர்த்தமத்தியந்திராசனம் போன்ற ஆசனங்கள் செய்யலாம். இவைகளை அவசரமில்லாமல் மெதுவாக பழக வேண்டும். இடையில் ஆசனம் செய்வதை நிறுத்திவிட்டால், மீண்டும் ஆரம்பிக்கும் போது புதியவர்களைப் போல வளையும் தன்மையையும், ஆசனத்தில் இருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.