பக்கங்கள்

31 ஜனவரி 2011

மாரடைப்பை குணப்படுத்தும் இஞ்சி!

“இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.
இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.
இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி
இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

28 ஜனவரி 2011

காதலனுடன் இருந்த பெண்ணை பலாத்காரம் புரிய முனைந்த பொலிஸ்!

தர்மபுரி மாவட்டம் ஏ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் முருகனின் மனைவி தனலட்சுமி. முருகன் இறந்து விட்டார். தனலட்சுமி நாதஸ்வர வித்வான். இவர் பெங்களூர் சென்று விட்டு மாலை 6-30 மணிக்கு தர்மபுரிக்கு வந்தார். தனலட்சுமியை உறவினர் வினோத்குமார் தர்மபுரி பஸ்நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் காட்டுப்பகுதியில் மதுகுடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் 2 போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை பார்த்ததும் அவர்களிடம் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து மிரட்டினர். தனலட்சுமியை தங்களுடன் வருமாறு அழைத்தனர். இதற்கு வினோத்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே வினோத்குமாரை தாக்கினார்கள். பின்னர் போலீஸ்காரர்கள் இருவரும் தனலட்சுமியை கற்பழிக்க முயன்றனர். அந்த நேரத்தில் வினோத்குமார் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனே வக்கீல் சிலருடன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வக்கீலுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தனலட்சுமி தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய தனலட்சுமியை மீட்டு தர்மபுரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீசாரை தேடி வருகிறார்கள்.

27 ஜனவரி 2011

இளவயதில் தாத்தாவாகிறார் இளைஞர்!

இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவரது 14 வயது மகள் 15 வயது காதலன் மூலம் கர்ப்பமாகி உள்ளாள். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.
அவளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 29 வயதிலேயே அதாவது மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆகும் பெருமையை அவர் பெற்றுள்ளார். படிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார்.
இளம் வயதிலேயே பெற்றோராக இருப்பதில் உள்ள சிரமத்தை நான் அறிவேன். அதை நினைத்து தான் சிறிது வருத்தமாக உள்ளது. எங்கள் குடும்பத்துக்கு புதிதாக வர இருக்கும் நபரை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். நான் இன்னும் இளைஞன் தான். குழந்தை பிறந்த பிறகு எங்களை போல 6 தலைமுறைகளை கொண்ட குடும்பம் இந்த உலகில் இருப்பது அரிது. இவ்வாறு ரைட் கூறினார்.
அதே நேரத்தில், குழந்தை பெறும் வரை இதே பள்ளியில் தனது காதலருடன் சேர்ந்து படிக்க விரும்புவதாக ரைட்சின் மகள் தெரிவித்து இருக்கிறாள்.

23 ஜனவரி 2011

வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வர வாய்ப்புள்ளதாம்!

வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது" என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.
இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.

19 ஜனவரி 2011

அசினின் உதட்டில் ஏதோ ஒரு மாற்றம்!?


விஜய் ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அசினை பார்த்த ரசிகர்கள் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக சொல்கிறார்கள். கஜினி, போக்கிரி, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஆழ்வார் போன்ற படங்களில் வந்த அசினுக்கும் காவலன் அசினுக்கும் வித்தியாசம் உள்ளது என்கின்றனர்.
இந்த மாற்றத்துக்கு காரணம் அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. உதட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று தகவல் வெளி யாகியுள்ளது. சல்மான்கானுடன் அசின் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படப்பிடிப்பு லண்டனில் நடந்த போது சிறிய விபத்தில் சிக்கினார் என்றும் இதில் அசின் உதடு கிழிந்து தொங்கியது என்றும் மும்பை பட உலகம் கிசுகிசுக்கிறது.
காவலன் படப்பிடிப்பு துவங்கிய போது உதட்டுக்கு அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இது பற்றி அசின் தரப்பில் கேட்ட போது மறுத்தனர். லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வேலை செய்து இரு வருடங்கள் ஆகிவிட்டது.
இத்தனை நாளைக்கு பிறகு அசின் விபத்தில் சிக்கினார் என்றும் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் செய்திகள் பரப்புவது உள்நோக்கமானது என்று அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
பிளாஷ்டிக் சர்ஜரி நடந்ததாக வெளியான தகவல்கள் புரளிதான் என்றும் கூறினர். அசின் “இமேஜை” சிதைப்பதற்காகவே இந்த புரளி கிளப்பப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

18 ஜனவரி 2011

விபச்சார விடுதி நடத்தியதாக பெண் கைது!

சென்னை தியாகராயநகரில் மசாஜ் கிளப்பில் விபசாரம் செய்ததாக அந்த கிளப்பின் பெண் அதிபர் கைது செய்யப்பட்டார். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை தியாகராயநகர் சாரங்கபாணி தெருவில் கடந்த டிசம்பர் மாதம் புதிதாக மசாஜ் கிளப் ஒன்று திறக்கப்பட்டது. அந்த கிளப்பில் மசாஜ் செய்ய செல்லும் வாலிபர்களிடம் அழகிகள் உல்லாசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
துணை கமிஷனர் சண்முகவேல் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் போலீஸ் படையுடன் சென்று அந்த கிளப்பில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
சோதனையின்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக 3 அழகிகளை போலீசார் மீட்டனர். மசாஜ் செய்வதற்கு ரூ.2,100ம், உல்லாசம் அனுபவிப்பதற்கு தனியாக இரண்டாயிரம் ரூபாயும் போலீசார் அனுப்பிய ஒருவரிடம் கிளப் உரிமையாளர் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இதன்பேரில் உரிமையாளர் சாந்தி (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூரைச் சேர்ந்த இவர், கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால், இந்த மசாஜ் கிளப்பை தொடங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2011

ஆயுளை 10 வருடங்கள்வரை அதிகரிக்கும் மருந்துவில்லை!

மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.
விலங்குகள் மற்றும் மனிதர்களிடமும் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த பக்கவிளைவுகளையும் இது ஏற்படுத்தவில்லை.
ஆனால் ஆயுளை மேலும், மேலும் நீடிக்க இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் பின்விளைவுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

14 ஜனவரி 2011

எலியை பாடவைத்து ஜப்பானிய விஞ்ஞானிகள் சாதனை!

மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் "மனிதனுக்கு பேச்சாற்றல் வந்த ரகசியம் குறித்து. அறிந்து கொள்ள முடியும்' என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பரிணாம வளர்ச்சிக்கு "மியூட்டேசன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிணாம வளர்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஜப்பானை சேர்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் களமிறங்கினர். எலிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து ஆய்வு நடத்தினர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் ஒன்று பறவைகள் போன்று குரல் எழுப்பியது தெரிந்தது. இதையடுத்து ஆய்வை, விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஆய்வுக் குழுவை சேர்ந்த, விஞ்ஞானி அரிக்குனி உச்சிமுரா கூறியதாவது:"பரிணாம வளர்ச்சிக்கு திடீர் மாற்றங்களே முக்கிய காரணி என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாற்று ஆய்வு உண்மை.
இதை அடிப்படையாக கொண்டு எலிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்கு, "எலிகள் பரிணாம வளர்ச்சித் திட்டம்' என்று பெயரிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் (டி.என்.ஏ.,) சில மாற்றங்களை செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, பறவைகள் போன்று குரல் எழுப்பியது. இது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலி, அதன் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து பாடும் குணாதிசயத்தை மரபணு மூலம் கடத்தும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
எனவே, அந்த எலியின் மரபணு தன்மையை அடிப்படையாக கொண்டு மேலும் 100 "பாடும்' எலிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு பேச்சாற்றல் வந்ததன் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பறவைகளின் பாடும் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அரிக்குனி உச்சிமுரா கூறினார்.

13 ஜனவரி 2011

த்ரிஷா வேண்டாம் ரஜனி ரசிகர்கள் எதிர்ப்பு.

ரஜினியின் ஹரா படத்தின் பெயர் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கான வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
ஹராவின் மீதிப் பகுதியை இயக்குபவர் கே எஸ் ரவிக்குமார்தான் என்பது உறுதியாகிவிட்டதால், அவர் இயக்கும் போர்ஷனில் இன்னொரு ஹீரோயினையும் சேர்க்கிறார்களாம்.
ஏற்கெனவே சௌந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் ரஜினிக்கு விஜயலட்சுமி ஜோடி. நிஜமான ரஜினிக்கு இன்னொரு ஜோடி என கதை மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பாத்திரத்துக்கு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்யப்போவதாக சில தினங்களாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் விஷயம் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள், 'த்ரிஷா வேண்டவே வேண்டாம்' என எதிர்ப்பு எஸ்எம்எஸ், இமெயில்கள் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். 'வித்யா பாலன், தீபிகா படுகோன் அல்லது ஐஸ்வர்யா ராய் நடிக்கட்டும். சிவாஜி பட நாயகி ஸ்ரேயா கூட ஓகே. ஆனால் த்ரிஷா மட்டும் வேண்டாம்' என்பது அந்த எஸ்எம்எஸ்ஸின் சாரம்.
த்ரிஷா மீது அப்படி என்ன கடுப்போ!

10 ஜனவரி 2011

நடிகை ஷோபனா தற்கொலை!

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி குடியிருப்பில், தாயார் ராணியுடன் வசித்து வந்த சோபனா, திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயார் ராணி வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி, பின்னர் கதவை திறந்து பார்க்கையில் இச்சம்பவம் நடந்திருப்பதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக ராணி கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷோபனாவின் வீட்டில் ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த டைரி குறித்து போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

09 ஜனவரி 2011

கர்ப்பமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

46 வயதாகும் அனிதா அரோரா , தபால் நிலைய மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நெய்ல், 15, மற்றும் காம்யா , 13 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
தெற்கு லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் அனிதாவிற்கு கடந்த ஜூலை மாதம் கர்ப்பமானதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடனடியாக பொது நல மருத்துவரை அணுகியுள்ளார் அனிதா. ஆனால் மருத்துவர்கள் இவர் கர்ப்பமாகவில்லை எனக் கூறி விட்டனர்.
அதன் பிறகும் அதிகமான எடை, வயிறு வலி, மாதவிடாய் தவறுதல் உள்ளிட்ட காரணங்களை எடுத்துக் கூறி இரண்டு மூன்று முறைகள் அனிதா மருத்துவர்களை அணுகியுள்ளார். அப்போதும் மருத்துவர்கள் கருவுருதலுக்கான பரிசோதனையை தவிர பிற பரிசோதனைகளை செய்யுமாறு கூறியுள்ளனர்.
சரியாக குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மாற்றங்களை கூறிய பின்னர் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். குறை மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தை பிறந்துள்ளது. மேலும் ஒரு நாள் தாமதமாகியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

06 ஜனவரி 2011

சுகாசினியின் திமிர் பேச்சு!

சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே... தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் "ஏன், எதுக்கு, என்னாச்சி..." டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!
அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டவும் செய்வார், வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும்.
ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்). அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ஹை ஸ்டைல் காட்சிகள் அதில்).
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். ஆனால் சுஹாஸினியை சிடி வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.
"இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.
ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான்", என்றார் சுஹாசினி.
"அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா... மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்..." என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.

02 ஜனவரி 2011

லெனின் வல்லுறவுக்கு முயன்றார் என்கிறார் ரஞ்சிதா!

நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுடன் படுக்கை அறையில் பல்வேறு சேவைகள் (வீடியோ வெளியானதும், அதில் ரஞ்சிதா செய்தவை எல்லாம் சேவை என்று கூறியிருந்தார் நித்தியானந்தா) குறித்த வீடியோவை லெனின் கருப்பன் அம்பலப்படுத்தினார். இதையடுத்து நித்தியானந்தாகவும், ரஞ்சிதாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் நித்தியானந்தாவை ஒரு மாத தேடலுக்குப் பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர் கர்நாடக போலீஸார். ஆனால் ரஞ்சிதா மட்டும் ஆளையே காணவில்லை.
இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின்னர் திடீரென வெளியுலகத்திற்கு வந்தார் ரஞ்சிதா. பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கூறினார். அத்தோடு நில்லாமல் லெனின் கருப்பன் மீதும் பல்வேறு புகார்களையும் அவர் அடுக்கினார்.
மேலும் ராம்நகர் காவல் நிலையத்திலும் ஒரு புகார் கொடுத்துள்ளார் ரஞ்சிதா.
அதில், 2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி லெனின் என்னிடம் வந்து, சில வீடியோக்களைக் காட்டினார். அதில் ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பிரம்ச்சாரினிகளை அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதன் வீடியோ காட்சிகளாகும்.
மேலும், என்னைப் போல ஒரு பெண், நித்தியானந்தாவைப் போன்று தோற்றமளித்த ஒருவருடன் காணப்படும் வீடியோவையும் காட்டினார்.
மேலும் அவர் என்னை ஒரு முறை கற்பழிக்கவும் முயன்றார். ஆனால் நான் கூச்சல் போடவும் அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
பின்னர் என்னை மிரட்டிய அவர் புகைப்படங்கள், வீடியோக்களை மீடியாவிடம் கொடுக்கப் போவதாக மிரட்டினார் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.
கற்பழிப்பு முயற்சி என்பது மிகப் பெரிய குற்றச் செயல். ஆனால் லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயன்றதாக தற்போது கூறும் ரஞ்சிதா, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்பது தெரியவில்லை. அவரும் இதுகுறித்து விளக்கவில்லை.