பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா.

பொதுவாக காதலர் அல்லது கணவன் பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான். அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது அன்பு மகன் ஆரவ் மேனனின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளாராம். ஆரவ் குட்டிக்கு இப்போது ஒன்றரை வயதாகிறதாம். அடுத்த குழந்தைக்கும் தயாராகியுள்ள மாளவிகா அந்தக் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 செப்டம்பர் 2010

ஆர்யாவுடன் வேட்டை ஆடப்போகிறார் தமன்னா.


லிங்குசாமியின் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனால் கடுப்பாகியிருந்த சிம்பு, சற்று ஓய்ந்த பின்னர் இப்பொழுது லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ திரைப்படத்தில் நாயகனாக ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரொடக்ஷன் தான் ‘வேட்டை’ படத்தினை தயாரிக்கிறது. அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அதிகமாக வழங்கிவரும் யுவன்சங்கர் ராஜா இப்படத்திலும் தனது கைவரிசையை காட்டவிருக்கிறார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக யாரைப்போடலாம் என்று பலரை நாடியிருக்கிறார்கள். இறுதியாக வேட்டையாடுவதற்கு சிறந்தவர் 'தமன்னா' என லிங்குசாமி அறிவித்திருக்கிறார். ஆகையினால் ஆர்யாவுடன் வேட்டைக்கு தயாராகிவிட்டார் தமன்னா. வெகுவிரைவில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

20 செப்டம்பர் 2010

பூஜா, நிலாவுடன் காதல் இல்லை -ஆர்யா.

ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நிலாவை காதலிப்பதாகவும் பேசப்பட்டது.
இதுபற்றி ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்ல இயலாது. நேரம் அமையும் போது நடக்கும். எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்.
“ஷோ பீப்பிள்” என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து “படித்துறை” என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. வில்லன் வேடத்திலும் நடிக்க தயார்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

காதலியைத் தீ மூட்டி கொல்ல முயன்ற இளைஞர்!

வெளிநாட்டில் இருந்து எட்டு வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் காதலி மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்ட முயன்ற சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றது. இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு ஒரு இளைஞனுடன் காதலி தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்கின்றார் என்கிற சந்தேகத்திலேயே இவ்வாறு நடந்து கொண்டார் என்று இவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

19 செப்டம்பர் 2010

போலீஸ் வருவதை காட்டி கொடுத்தது: போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

நியூயார்க்,அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.
இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

18 செப்டம்பர் 2010

உடல் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால்.

தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது.
பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சரிவிகித உணவுடன் கொழுப்பு சத்து குறைவான 3 டம்ளர் பால் குடித்து வருவதன் மூலம் தங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

16 செப்டம்பர் 2010

மீண்டும் தெலுங்கில் நடிகை திரிஷா!

இந்திப் படங்கள் தன்னைக் கைவிட்டதைத் தொடர்ந்து தெலுங்குப் படவுலகுக்குத் திரும்பிள்ளார் நடிகை திரிஷா.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கட்டா மிட்டா படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் த்ரிஷா. இப்படத்தை இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து, தயாரித்திருந்தார்.
கட்டா மிட்டா உட்பட அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க த்ரிஷாவை அக்ஷய் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் கட்டா மிட்டா படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதில் அக்ஷய்க்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் படங்கள் தயாரிக்கும் திட்டத்தை அவர் தள்ளிப் போட்டுள்ளாராம்.
இதையடுத்து அக்ஷய் குமாரின் படங்களில் த்ரிஷா நடிக்க போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இதனால்தான் உடனடியாக தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதேபோல தமிழில் வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளாராம் திரிஷா.

15 செப்டம்பர் 2010

கமலை சந்தோஷப்படுத்திய 3 ஷா!

உலக நாயகன் கமலஹாசனை நடிகை த்ரிஷா சந்தோஷப்படுத்தியுள்ளார். ஆமாங்க, தனக்கு பிடித்த நடிகர் கமல்தான் என்று கூறியிருக்கிறார் 3 ஷா. தமிழில் முன்னணி நடிகையாக உள்ள அவர் தெலுங்கிலும் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யாக இருக்கிறார். “காட்டா மிட்டா” படம் மூலம் இந்தியிலும் கால் பதித்துவிட்டார். உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என பலமுறை அவரிடம் கேட்கப்பட்டும் இதுவரை அதற்கு பதில் சொல்லவே இல்லை. தற்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து விட்டார். யாரையேனும் ஒருவர் பெயரை சொன்னால் மற்ற ஹீரோ கோபப்படுவார் என்ற பயத்தில் இந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து வந்தார்.
இப்போது முதல் முறையாக தனக்கு பிடித்த நடிகர் கமல் என்று வெளிப்படை யாக கூறி இருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக் கும் “மன்மதன் அம்பு” படத் தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டியே நடந்தது.
தனது நலம் விரும்பிகளை தூது அனுப்பி வாய்ப்பை தட்டி பறிக்க நயன்தாரா முயன்றார். ஆனால் திரிஷா தான் கதாநாயகி என்பதில் கமலும் ரவிக்குமாரும் உறுதியாக இருந்து விட்டனர். இப்படத்தின் டூயட் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
டுவிட்டரில் திரிஷா கூறி இருப்பதாவது :
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுவரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியை தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்கு பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை.
நடிகைகளில் ஏற்கனவே சிம்ரனை பிடித்தது. இப்போது தமன்னா மற்றும் சமந்தாவை பிடிக்கும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார் த்ரிஷா.

14 செப்டம்பர் 2010

நடிகை ரவீனாடண்டன் வீட்டில் கொள்ளை!

‘ஆளவந்தான்’, ‘சாது’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டண்டன். திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவரது மாமியார் வீடு, மும்பை லிங்க்கிங் சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் உள்ளது.
இந்த வீட்டில் கணவர் தடானி, மாமனார் குந்தன் தடானியுடன் ரவீனா வசித்து வருகிறார். கடந்த வாரம் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் ரவீனா சென்றிருந்தார். மாலையில் சென்றவர்கள், நள்ளிரவில் வீடு திரும்பினர்.
மறுநாள் காலையில் தனது அறையில் இருந்த பீரோவை ரவீனாவின் மாமனார் குந்தன் திறந்தபோது, அதிர்ந்தார். சூட்கேசில் வைத்திருந்த 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக பாந்த்ரா போலீசீல் அவர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ரவீனா வீட்டில் வேலை செய்த ராம் யாதவ் (40), அசோக் யாதவ் (25) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணையில் நடுங்கிப் போன அந்த வேலைக்காரர்கள், கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
‘‘திருடலாம் என முடிவு செய்தே வேலையை விட்டு சென்றுள்ளனர்.
ரவீனா குடும்பத்தார் பார்ட்டிக்கு செல்லும் தேதியை இருவரும் அறிந்து வைத்திருந்தனர். அன்றைய தினம் கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதே மாதிரி பீரோவுக்கும் கள்ளச்சாவி பயன்படுத்தியுள்ளனர்.
பாந்த்ரா போலீசார் அவர்களை கைது செய்து பணத்தையும் மீட்டுள்ளனர்.

13 செப்டம்பர் 2010

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்! பிரபுதேவா தகவல்!


காதல் விவகாரம் பற்றி கேட்கும் போதெல்லாம் சொந்த விஷயம் என்று சொல்லி கருத்து சொல்லாமல் நயன்தாரா, பிரபுதேவா இருவருமே மவுனம் காத்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரபுதேவா பேட்டி அளித்துள்ளார். மும்பை அருகில் உருமி படத்தை இயக்கிக் கொண்டிருந்த அவரிடம் நயன்தாராவுடன் காதல் பற்றி கேட்கப்பட்டது.
கேள்வி: நயன்தாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?
பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.
அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனை கள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயன்தாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.
கேள்வி: நயன்தாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?
பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகை களில் நிறைய செய்திகள் என்னைப்பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.
ஆனால் நயன்தாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயன்தாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக் களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.
கேள்வி: உங்களால் நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நயன்தாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயன்தாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.

12 செப்டம்பர் 2010

ஸ்ரேயா ஆடிய கேம்!


கெரகம் கூரையை பிய்ச்சுகிட்டு குட்டும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். டான் சீனு படத்தில் ரவி தேஜாவுடன் நடித்திருந்தவர் அஞ்சனா சுஹானி. இவரை தமிழில் நடிக்க வரச்சொல்லி ஒரே அழைப்புகள். தெலுங்கு சம்பளத்திற்கும் தமிழ் சம்பளத்திற்கும் குறைந்த பட்ச வித்தியாசம் சில லகரங்கள்தான் என்பதால் சரி என்று ஒப்புக் கொண்டு சென்னைக்கும் வந்துவிட்டார் சுஹானி. இந்த நேரத்துலதான் ஸ்ரேயாவின் கோள்மூட்டலால் அந்த வாய்ப்பு அதோகதியாகிவிட்டது அவருக்கு. சுஹானிக்கும் தெலுங்கு ஸ்டார் ராணாவுக்கும் பயங்கர லவ். திடீர்னு சொல்லாம கொள்ளாம ஆந்திராவுக்கு ஓடிருவா. அப்புறம் கால்ஷீட் வாங்கி நினைச்ச மாதிரி ஷ§ட்டிங் எடுப்பதெல்லாம் குதிரைக் கொம்பு என்று ஸ்ரேயா போட்டுக் கொடுக்க, அப்புறம்தான் பறிபோனது சுஹானியின் வாய்ப்பு. இதை அப்படியே ராணாவிடம் போய் சொல்லி அழுதாராம் சுஹானி.
விட்டத்துல அடிச்ச பந்து வினாடியில திரும்பி வரும்ங்கிற மாதிரி, ஸ்ரேயாவின் வாய்ப்புக்கு செம லாக் போட்டார் ராணா. தெலுங்கில் இவர் நடிக்க ஒப்பந்தமான ராணி என்ற படத்திலிருந்து அவரை து£க்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். ஹீரோ சொன்னால் மறுப்பேது? இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இலியானாவை புக் பண்ணியிருக்கிறார்கள்.

11 செப்டம்பர் 2010

கைலியால்(சாரம்) நின்ற திருமணம்!

சிதம்பரம் எம்.கே. தோட்டத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் சதீஷ்குமார், திரைப்பட இசையமைப்புக் குழு ஒன்றில் கிபோர்டு வாசிப்பாளராக உள்ளார். இவருக்கும் சிதம்பரத்தை அடுத்த கீழவன்னியூரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் பத்மாவதிக்கும் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்களது திருமணம் வெள்ளிக்கிழமை (10.09.2010) அன்று சிதம்பரம் கோவிலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பவர்கள் திருமண விழாவில் பங்கேற்க கோவிலுக்கு வருகை தந்தனர்.
திருமணம் நேரம் நெருங்கும் வரை பெண்ணின் தகப்பனார் கைலியோடு (லுங்கி) இருந்ததால், மாப்பிள்ளை உறவினர்கள் கிண்டல் செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ள நேரத்தில் கைலியோடு இருப்பதா என்றும், வேட்டி கட்டிவர வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.
இதற்கு பெண் வீட்டார் எங்களுக்கும் நாகரீகம் தெரியும். இவ்வளவு செலவு செய்து பெண்ணை கட்டிக் கொடுக்கும் எங்களுக்கு வேட்டி கட்டத் தெரியும் என்று பேசியுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே பெண் வீட்டார் வரம்பு மீறி பேசுவதால், இந்த திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தகப்பனாரும் கோவித்துக் கொண்டு கோவிலைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்களை திருமணத்துக்கு வந்தவர்கள் சமாதானம் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இருதரப்பினரும், சிதம்பரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
கைலி கட்டியதால்தான் திருமணம் நின்று விட்டதா என்று ஆச்சரியப்படுகின்றனர் சிதம்பரம் பகுதி மக்கள்.

10 செப்டம்பர் 2010

பெண் பித்தர்களுக்கு ஆயுள் குறைவென ஆய்வு சொல்கிறது.

"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.
பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்
இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.
இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.
இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.
இவர்கள் எல்லோருக்குமே நோக்கம் ஒன்றே ஒன்றுதான்; அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதவிதமான பெண்களை கட்டிலில் வீழ்த்துவதுதான்! கூடவே பெண்கள் புடை சூழ வளைய வருவதும், தங்களுக்கு பெண் ஃபிரண்ட்ஸ்கள் அதிகம் என்பது போன்ற இமேஜை நண்பர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்று செயல்படுவார்கள்.
அதே சமயம் அசரடிக்கிற பெர்சனாலிட்டி மற்றும் கொஞ்சமே கொஞ்சம் போக்கிரித்தனத்துடன் பெண்களை தானாகவே வந்து வட்டமடிக்க வைக்கிற பிளேபாய்களும் உண்டு.
ஆனால் பெண்கள் மத்தியில் இவர்களுக்கு பெயர் ஸ்வீட் ராஸ்கலாம்!
இந்த மாதிரியான ஆண்கள் குறித்துதான், ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, மேற்கூறிய "ஆயுசு குறைச்சல்" என்ற அதிர்ச்சி வெடியை கொளுத்தி போட்டுள்ளது!
இத்தகைய பிளேபாய்கள் மற்றும் ஸ்வீட் ராஸ்கல்களிடமெல்லாம் காணப்படும் ஒரு பொதுவான குணம் மனம்போன போக்கில் வாழ்வது!
வாழ்க்கை தொடர்பான எத்தகைய நெறிமுறைகளுக்கும் உட்படாமல், புதுப்புது பெண்களை தேடி கண்டபடி திரியும் இவர்களது இந்த குணம்தான் இவர்களது ஆயுளுக்கும் எமனாக அமைந்துவிடுவதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் பிரபல ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஜோர்டான்!

07 செப்டம்பர் 2010

பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்(காணொளி இணைக்கப்பட்டுள்ளது).


பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார். பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண் தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்.
இந்தக் கன்றுக்கும் மனிதக் குழந்தைக்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லையென அவர் கூறுகிறார்.இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதி பாய் என்னும் பெண்ணே இவ்வாறு கன்றுக்கு பாலூட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், 'இந்தக் கன்று பிறந்தவுடன் அதனது தாயை பறிகொடுத்தது. அதுநாள் முதல் இந்தக் கன்றை நானே எனது கைகளால் தூக்கி வளர்க்கின்றேன். அந்தப் பசுக்கன்றுக்கு இயற்கை முறையில் நான் பாலூட்டி வருகின்றேன்.
தாய்ப் பசு இறக்கும்போது அந்த இளம் கன்றை நான் கண்டேன். குழந்தைக்கும் அந்தக் கன்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சில நேரங்களில் சப்பாத்தி போன்ற உணவுகளை உண்பதற்கு வழங்குவோம். அதனோடு மிகவும் மெதுவாக தண்ணீரை குடிப்பற்கு வழங்குவோம். இந்த விரதத்திலிருந்து அந்தக் கன்று வளர்ச்சியடையத் தொடங்கியது. கடவுள் அருளினால் இந்தக் கன்றை என்னால் வளர்க்க முடிகிறது' என்று தெரிவித்துள்ளார்.
அந்த கிராமத்திலிலுள்ள மற்றுமொருவர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் முதன்முறையாக எமது கிராமத்தில் நடந்துள்ளது. அப்பெண் எங்கு சென்றாலும் தன்னுடன் கன்று குட்டியையும் கொண்டு செல்வார். எமது தாய் எமக்குப் பாலூட்டியதைப் போன்று அந்தக் கன்றுக்கு பால்கொடுப்பார். அவள் தன்னுடைய பாலையே அந்தக் கன்றுக்கு உணவாக' ஊட்டி வளர்க்கின்றார்' எனத் தெரிவித்துள்ளார்.

05 செப்டம்பர் 2010

பெண்ணை இழுத்துச் சென்று சிறையில் பூட்டி கொடுமைப்படுத்திய காவலர் - அதிர்ச்சியூட்டும் காணொளி இணைப்பு.



வில்ட்ஷிர் பகுதியில் 57 வயதாகும் பமேலா சொமேர்வில்லே என்ற பெண்ணை காவல்துறை அதிகாரி தரையில் இழுத்துச் சென்று சிறைக்குள் பூட்டியதுடன் அந்த பெண்ணை காயப்படுத்தி உணர்வற்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பின் அந்தப் பெண் கண்களில் பலத்த காயங்களுடனும் ரத்தத்துடனும் வெளியே வந்துள்ளார். சந்தை ஆராய்ச்சியாளராக பணி புரிந்த இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஜி-20 எதிர்ப்புக் கூட்டங்களின் போது காவல்துறைக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள உறவு நிலையின் தன்மை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்த போது தன்னுடைய காரில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சி.சி.டி.வி காமேராவிலும் பதிவாகியுள்ளது. இதனால் அந்தப் பெண் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அன்ட்ரீயுஸ் என்ற அந்த காவலருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
தான் எந்த தவறும் செய்யாமல் காவல்துறை அதிகாரியால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அது போன்ற நிலை வேறு யாருக்கும் இனி ஏற்படக் கூடாது என்பதாலேயே வழக்கு பதிவு செய்ததாகவும் அந்தப் பெண் கூறியதோடு இந்த தண்டனை பொது மக்களை துன்புறுத்தும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

02 செப்டம்பர் 2010

நாய்க்குட்டிகளை ஆற்றில் வீசும் கொடூரம்!(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


கடந்த வாரம் பிரித்தானியாவை சேர்ந்த 45 வயதாகும் மேரி பேல் என்ற பெண் கொவென்ட்ரி பகுதியில் பூனையை குப்பைத்தொட்டியில் போட்டு மூடிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே கோபத்தை உண்டுபண்ணியதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் தற்போது சிகப்பு சட்டை அணிந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் உயிருடன் இருக்கும் நாய்க்குட்டிகளை கொல்வதற்காக வேகமாக ஓடும் ஆற்றுத் தண்ணீருக்குள் தூக்கியெறியும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது விலங்கின ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த வீடியோ கிழக்கு ஐரோப்பாவின் கிரோடியா பகுதியில் எடுக்கப்பட்டிருப்பதை விலங்கின ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாய்குட்டிகள் பயந்து சத்தம் எழுப்பியும் சிறிதும் இரக்கமில்லாமல் அவற்றை தூக்கி ஆற்றுக்குள் போடும் இந்த பெண்ணையும் கண்டறிந்து அதே போல் தூக்கி எறிய வேண்டும் என்ற அளவிற்கு விலங்கின ஆர்வலர்களிடையே இந்த வீடியோ மிகுந்த பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
அந்த பெண் யார் என்பதை கண்டறியும் ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர். தினமும் எங்கள் சேவை அமைப்பிற்கு இது போன்ற கொடுமைகள் அடங்கிய படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டு தான் உள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்தும் மக்களின் இந்த மனோபாவம் மாற வேண்டும் என விலங்குகளுக்கான சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

01 செப்டம்பர் 2010

மணமகளை கடத்திய காதலன்.



ஜெயங்கொண்டம்: உடையார் பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சத்யாவிற்கும், வடவீக்கத்தைச் சேர்ந்த குமணன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இதையறிந்த சத்யாவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா, குமணனுடன் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சத்யாவை அவரது பெற்றோர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். இதற்கிடையில் சத்யாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இந்த விஷயம் அறிந்த குமணன்,. நேற்று இரவு சத்யாவை கடத்தியுள்ளார். மகள் சத்யாவை காணவல்லை என, உடையார் பாளையம் காவல்நியைத்தில் பிச்சை புகார் அளித்ததையடுத்து, போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சத்யா - குமணன் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், சத்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து, குமணன் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம், சமாதானம் செய்து வரும் சத்யா பெற்றோர், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.