பக்கங்கள்

27 அக்டோபர் 2010

நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்!

நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.
அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சி க்கு விமானத்தில் சென்றனர்.
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.
அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.
இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு 'செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை 'மீட்க' திருச்சிக்கு விரைந்தார்கள்.
நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
பிதா மகன் ஸ்டைலில்...
பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.
நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக