பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2014

மிகப்பெரிய வயிற்றை கொண்டிருந்த கர்ப்பிணி!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­போது அவரின் வயிறு 55 அங்­குல சுற்­ற­ளவைக் கொண்­ட­தாக இருந்­தது. உலகில் கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வயிற்றை கொண்­டி­ருந்த பெண்­களில் ஒரு­வ­ராக இவர் இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.29 வய­தான லாரா கார்­பென்டர் பெக் எனும் இப்பெண், கடந்த வருடம் தனது முத­லா­வது குழந்­தையை பிர­ச­வித்தார். லாரா கர்ப்­ப­ம­டைந்­த­வுடன் அவரின் எடை திடீ­ரென அதி­க­ரித்­தது. அவர் நீரி­ழிவு நோயா­ளி­யாக இருந்­த­மையும் இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சாதா­ரண கர்ப்­பிணிப் பெண்கள் அணியும் ஆடை­களின் அளவு இவர்­க­ளுக்குப் பொருந்­தா­ததால் மிகப் பெரிய ஆடை­யொன்றை அவர் அணிய வேண்­டி­யி­ருந்தது.இறு­தியில் 9 இறாத்தல் மற்றும் 5 அவுன்ஸ் (சுமார் 4 கிலோ­கிராம்) எடை­யு­டைய பெண் குழந்­தையை பிர­ச­வித்தார். பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் ஜோர்ஜ் பிறந்­த­போது இருந்­த­தை­விட இக்­கு­ழந்தை சுமார் ஒரு இறாத்தல் அதிக எடை­யு­டை­ய­தாகும். "70 கிலோ­கி­ரா­மாக இருந்த எனது எடை கர்ப்­ப­ம­டைந்து 36 ஆவது வாரத்தில் 114 கிலோ­கி­ரா­மாக அதி­க­ரித்­ததை என்னால் நம்ப முடி­யாமல் இருந்­தது. இது எனது முதல் கர்ப்பம். எனவே என்­னென்ன நடக்­கலாம் என்­பது குறித்து நான் எதுவும் அறிந்­தி­ருக்­க­வில்லை. அவ்­வ­ளவு பெரிய வயிற்றை கொண்­டி­ருப்­பது மிக சிர­ம­மாக இருந்­தது. உறங்­கு­வ­தற்கும் கஷ்­டப்­பட்டேன். எனினும் இறு­தியில் ஆரோக்­கி­ய­மான மகள் பிறந்­த­மையால் நானும் எனது கண­வரும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்ளோம்" என லாரா கூறு­கிறார். தற்­போது தனது எடை குறைந்துள்ள நிலையில், கர்ப்பகாலத்துக்கு முன்னர் தான் அணிந்த ஆடைகளை இப்போது மீண்டும் அணிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

25 ஜூலை 2014

17 வயது இளைஞன் வாயில் 232 பற்கள்!

மும்பையில் பள்ளிச் சிறுவன் ஒருவனின் வாயிலிருந்து சுமார் 232 பற்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் ஆஷிக் கவை(17). சமீபகாலமாக ஆஷிக்கின் வலது கன்னத்தின் உட்பகுதியில் வீக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் வலி அதிகமாகவே இது தொடர்பாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளான் ஆஷிக். ஆஷிக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது கடைவாய்ப் பல்லைப் பாதிக்கும் அளவில் ஒரு அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். எனவே, அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப் படுத்த அவர்கள் திட்டமிட்டனர். அறுவைச் சிகிச்சை... அதன் தொடர்ச்சியாக கடந்த திங்களன்று ஆஷிக்கிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடந்த அந்த அறுவைச் சிகிச்சையில் மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. கடுகு சைஸ் பற்கள்... வீக்கம் காணப்பட்ட பகுதியில் இருந்து சிறிய அளவிலான பற்கள் குவிந்து கிடந்துள்ளது. கடுகு அளவிலிருந்து சிறிய பளிங்கு கல் அளவிலான பலதரப்பட்ட அளவில் பற்கள் அந்த வீக்கத்தில் இருந்துள்ளன. 232 பற்கள் நீக்கம்... அறுவைச் சிகிச்சை மூலம் வீக்கமடைந்த இடத்திலிருந்து மொத்தம் 232 பற்களை நீக்கியதாக இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனையின் பல் மருத்துவப்பிரிவின் தலைவர் சுனந்தா திவாரே பல்வங்கர் தெரிவித்துள்ளார். அசாதாரணமான செயல்... இவை அனைத்தும் சாதாரண பற்கள் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருந்ததையும், ஒரே பல்லில் இருந்து வளர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்ட சுனந்தா, மருத்துவ நிகழ்வுகளில் இந்த செய்கை மிகவும் அசாதாரணமான ஒன்றாகும் என ஆச்சர்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி... மேலும், கட்டி போன்ற வளர்ச்சி பெற்ற ஒன்றும் அந்த வீக்கத்தில் இருந்து நீக்கப் பட்டுள்ளது. ஆஷிக்கின் வாயில் இது போன்ற பல் வளர்ச்சி ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். வரலாறு படைக்குமா... வாயிலிருந்து இத்தனை எண்ணிக்கையில் பற்கள் நீக்கப்பட்ட சம்பவம் உலக சாதனையில் இடம் பிடிக்குமா என்று தற்போது மருத்துவர்கள் மருத்துவ வரலாறுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

20 ஜூன் 2014

வெங்காயத்தின் நன்மைகள்!

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.
நெஞ்சில் படபடப்பு:
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோய்:
மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.  

வெங்காயச்சாறு:
 * வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 * புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
 * தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
 * வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

29 மார்ச் 2014

உணவில் இருக்கு மருத்துவம்!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும். மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள். பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது. ,அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும். தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும். கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.