பக்கங்கள்

09 ஜூன் 2010

நடிகை சசிரேகா மரணம்,தப்பியோடியவர்களை தேடுகிறது காவல்துறை.


தெலுங்கு நடிகை சசிரேகா நேற்று சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீட்டில் இறந்துகிடந்தார். அவருடன் தங்கியிருந்த நடன இயக்குநர் ஷா, மற்றும் பக்கத்து அறையில் தங்கியிருந்த ஷாவின் நண்பர்களை தலைமைறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா காலனியில் மருவூர் அரசி கார்டன் என்ற பண்ணை வீடு உள்ளது. இங்கு தங்குவதற்கு 8 அறைகள் உள்ளன. கிளப் உறுப்பினர்கள் மட்டுமே இங்கு தங்க முடியும். கிளப் உறுப்பினர்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே மற்றவர்கள் தங்கமுடியும். கடந்த 6-ந் தேதி 28 வயதுடைய கீழ்க்கட்டளையைச் சேர்ந்த நடன நடிகர் ஷா’வும் 20 வயதுடைய தெலுங்கு சீரியல் நடிகை சசிரேகாவும் இங்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். குமார் என்ற பெயரில்தான் இங்கு அறை புக் செய்துள்ளார் ஷா. நேற்று முன்தினம் மதியம் ஷா வெளியில் சென்று விட்டார். சசிரேகா தூங்கிக்கொண்டு இருக்கிறார். யாரும் அவரை எழுப்ப வேண்டாம். நான் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன் என்று ரூம் பாயிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவேயில்லை. வெகு நேரம் ஆகியும் ஷா வராததால் பண்ணை வீட்டின் மானேஜர் சந்தேகம் அடைந்து அறையில் எட்டிப் பார்த்த போது சசிரேகா தூக்கில் பிணமாக தொங்கினார். துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சசிரேகா தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. சசிரேகா வளசரவாக்கம் காமாட்சி நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். தந்தை சீனிவாசரெட்டி பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையால் அடிக்கடி ஷாவை பார்க்கச்சென்றுள்ளார். அப்படி ஏற்பட்ட பழக்கத்தால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சசிரேகா, ஷா தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்ட போது 6 பீர் பாட்டில்களும், ஆணுறைகளும் இருந்தன. கீழ்க்கட்டளையில் உள்ள ஷா வீட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு 50 ஆணுறை பொட்டலங்களும், பீர் பாட்டில்கள், வீடியோ கேசட்டுகளும் சிக்கின. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்த போது தினமும் 2, 3 பெண்கள் வரை வந்து செல்வார்கள் என்று தெரிவித்துள்ளனர். பண்ணையில் தங்கியிருந்த ஷா, பக்கத்து அறையில் தங்கியிருந்த அவரின் நண்பர்கள் நான்கு பேர், ஒரு பெண் எங்கே என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கிடைத்தால்தான் சசிரேகா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக