பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவரின் வயிறு 55 அங்குல சுற்றளவைக் கொண்டதாக இருந்தது. உலகில் கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வயிற்றை கொண்டிருந்த பெண்களில் ஒருவராக இவர் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.29 வயதான லாரா கார்பென்டர் பெக் எனும் இப்பெண், கடந்த வருடம் தனது முதலாவது குழந்தையை பிரசவித்தார்.
லாரா கர்ப்பமடைந்தவுடன் அவரின் எடை திடீரென அதிகரித்தது. அவர் நீரிழிவு நோயாளியாக இருந்தமையும் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சாதாரண கர்ப்பிணிப் பெண்கள் அணியும் ஆடைகளின் அளவு இவர்களுக்குப் பொருந்தாததால் மிகப் பெரிய ஆடையொன்றை அவர் அணிய வேண்டியிருந்தது.இறுதியில் 9 இறாத்தல் மற்றும் 5 அவுன்ஸ் (சுமார் 4 கிலோகிராம்) எடையுடைய பெண் குழந்தையை பிரசவித்தார். பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் ஜோர்ஜ் பிறந்தபோது இருந்ததைவிட இக்குழந்தை சுமார் ஒரு இறாத்தல் அதிக எடையுடையதாகும்.
"70 கிலோகிராமாக இருந்த எனது எடை கர்ப்பமடைந்து 36 ஆவது வாரத்தில் 114 கிலோகிராமாக அதிகரித்ததை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
இது எனது முதல் கர்ப்பம். எனவே என்னென்ன நடக்கலாம் என்பது குறித்து நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவ்வளவு பெரிய வயிற்றை கொண்டிருப்பது மிக சிரமமாக இருந்தது. உறங்குவதற்கும் கஷ்டப்பட்டேன்.
எனினும் இறுதியில் ஆரோக்கியமான மகள் பிறந்தமையால் நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என லாரா கூறுகிறார்.
தற்போது தனது எடை குறைந்துள்ள நிலையில், கர்ப்பகாலத்துக்கு முன்னர் தான் அணிந்த ஆடைகளை இப்போது மீண்டும் அணிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆகஸ்ட் 2014
25 ஜூலை 2014
17 வயது இளைஞன் வாயில் 232 பற்கள்!

20 ஜூன் 2014
வெங்காயத்தின் நன்மைகள்!
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.
நெஞ்சில் படபடப்பு:
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோய்:
மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெங்காயச்சாறு:
* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
நெஞ்சில் படபடப்பு:
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோய்:
மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெங்காயச்சாறு:
* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.
* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
29 மார்ச் 2014
உணவில் இருக்கு மருத்துவம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)