பக்கங்கள்

15 டிசம்பர் 2010

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்?

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? பெண்கள் சென்றால் என்ன தப்பு? இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஜெயமாலாவை பாராட்டுகிறேன், என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள அய்யப்பன் சிலையைத் தொட்டு வணங்கியதாகக் கூறினார் நடிகை ஜெயமாலா. ஆனால் அவர் தொட்டிருக்க வாய்ப்பில்லை, பொய் சொல்கிறார் என மறுத்தது கோயில் நிர்வாகம். ஆனால் ஜெயமாலா, தான் கருவறைக்குள் நுழைந்து அய்யப்பனைத் தொட்டு தரிசித்தது உண்மையே என்று கூறியதால், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, நேற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்டு கருத்துத் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரேயா, ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு தரிசித்திருந்தால் அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன், என்று கூறியுள்ளார்.
மேலும், அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றால் என்ன தவறு? ஏன் அனுமதி மறுக்கிறார்கள் என்பதே புதிராக உள்ளது", என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக