பக்கங்கள்

21 மார்ச் 2011

புறக்கர்ப்பம் ஏற்படுவதற்கான காரணம்.

சில வேளைகளில் தொடக்கத்திலேயே கர்ப்பம் தவறாகப் போய்விடுவது உண்டு. கருவுற்ற பிறகு, சினைமுட்டையானது கருப்பைக்கு நகர்வதற்குப் பதிலாக, கருப்பைக் குழாயிலேயே ஒட்டிக்கொண்டு அங்கேயே வளர்வது உண்டு. கருவுறுதல் சினைப்பையில் நிகழ்வதும், கருப்பைக் குழாயை முட்டை அடைவதும் மிகக் குறைவான அளவிலேயே நிகழ்கின்றன.
மிக அரிதாக, முட்டையானது கருப்பைக் குழாய்க்கு வெளிப்பக்கதிலோ அல்லது குழாய்க்கு முனையிலேயோ கருவுற்கு, பிறகு வயிற்றுப் பள்ளத்தில் பதியமாகி, இரத்த ஓட்டத்தை உருவாக்கிக் கொண்டு வளரத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய கர்ப்பங்கள் பொதுவாக நிலைப்பதில்லை என்றாலும், மிக அரிதாக ஒன்றிரண்டு வளர்ந்துவிடுவது உண்டு. இவையெல்லாம் வெளிப்பகுதியில் கருத்தரிப்பை உண்டாக்குகின்றன.
கருப்பைக் குழாயில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று ஏற்படுவதுதான் புறக் கர்ப்பத்துக்கான பொதுவான காரணம்.
உதாரணத்துக்கு, நோய்த் தொற்றினால் கருப்பைக் குழாய்கள் சேதமுற்று அவற்றின் உருவ அமைப்பு ஒழுங்கீனமாகி விடுவதால், உயிரணுக்களால் குழாயின் கடைசி நுனிவரை ஊர்ந்து செல்ல இயலாது. இதனால், சினைப்பையின் அருகில் கருத்தரிப்பு நிகழ்கிறது. கருப்பைக் குழாயின் பாதை மிகக் குறுகியதாக இருப்பதால், அந்த வழியாக கருப்பைப் பள்ளத்தை நோக்கி சினைமுட்டை ஊர்ந்து செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டு புறக் கர்ப்பம் உண்டாகிறது.
இவை தவிர, வேறு எண்ணற்ற காரணிகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
கடந்த முறை ஏற்பட்ட புறக் கர்ப்பம்,
சிசேரியன் முறையிலான கடினப் பேறு,
இடுப்புக் கூட்டில் அறுவைச் சிகிச்சை,
கருப்பைக் குழாய்களில் அடைப்பு,
இடுப்புக் கூட்டுப்பகுதி கட்டிகள்,
தானாகக் தூண்டப்படுகிற கருச்சிதைவுகள் அல்லது கருவுறுதலுக்காகச் சாப்பிடும் மாத்திரைகள்,
உடலுறவுக்கு முன் ஈஸ்ட்ரோஜென் தடுப்பு மாத்திரையை எடுத்துக் கொள்ளுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக