பக்கங்கள்

01 மே 2010

ஒருதலைக் காதல்!!!


சூர்யா,ப்ரெய்ன்,ரதன் மூவரும் ஒரே தொழிலகத்தில் வேலை செய்து வந்தார்கள்,
அங்கே சுபோ என்ற அழகிய பெண்ணும் வேலை செய்து வந்தார்,
சுபோவும் ரதனும் மிகவும் நட்பாக பழகி வந்தார்கள்,சூர்யாவும்,ப்ரெய்னும்
ஒருதலையாக சுபோவை காதலித்து வந்தார்கள்,பின்பு இருவருமே கடிதமூலமாக
தமது காதலையும் தெரிவித்து விட்டார்கள்,இருந்தபோதும் சுபோ இந்த காதலை
ஏற்றுக்கொள்ளவில்லை,இந்த விடயங்களை ரதனிடம் சுபோ பகிர்ந்து கொண்டார்,
ஆனாலும் அவர்கள் இருவரும் விட்டபாடில்லை,
சூர்யா தனது கையை வெட்டி இரத்தம் எடுத்து சுபோவுக்கு கடிதம் எழுதிகொடுத்தார்,
இது சம்பந்தமாக ரதனிடம் முறையிட்ட சுபோ,நீங்கள் இதில் தலையிட வேண்டுமென
கேட்டுக்கொண்டார்,இதையடுத்து ரதனுக்கும்,சூர்யாவுக்குமிடையே வாதப்பிரதிவாதங்கள்
இடம்பெற்றன,பழகி எட்டு நாட்களிலேயே இரத்தத்தில் கடிதம் எழுதும் அளவிற்கு
காதல் மலர்ந்துவிட்டதோ என ரதன் கேட்டார்,அதற்கு காதல் ஒரு செக்கனிலும் வரும்
என சூர்யா தெரிவித்தார்,இதற்கு ரதன் அதற்கு பெயர் காதல் இல்லை காமம் என்றார்,
நீங்கள் சுபோவை காதலிப்பதாக இருந்தால் சொல்லுங்கள் நான் ஒதுங்கிகொள்கிறேன் என
சூர்யா தெரிவித்தார்,இதன் பின் ப்ரெய்ன்,சூர்யா இருவரும் தமது காதல் நாடகத்தை
முடிவுக்கு கொண்டுவந்தனர்,ஆனாலும் சுபோ ரதனை ஒருதலையாய் காதலித்து வந்தவிடயம்
சுபோவினாலேயே பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும் ரதனால் அதை ஏற்றுக்கொள்ள
முடியாமல் போய்விட்டது,சுபோ ரதன் இருவரும் தொடர்பற்றவர்களாக......!
(இது ஒரு உண்மை சம்பவம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக