பக்கங்கள்

20 மே 2010

முதலாமாண்டு நினைவு வணக்கம்!


திரு:நாகலிங்கம் அரியகுட்டி.
திருமதி:அரியகுட்டி நாகபூரணம்.
சுழிபுரம்.
அப்பாவே உங்களை பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ?
நேற்றுப்பேசியது போல் உங்கள் வார்த்தைகள் காதினுள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
கண்ணீர் எம் கன்னங்களை இன்னும் நனைத்துக்கொண்டே இருக்கிறது,
நாம் என்ன தவறு செய்தோம் அப்பாவே?
அம்மாவை பிரிந்திருந்து நாம் கண்டதில்லை உங்களை,
அதனால்தான் அம்மாவையும் உடன் அழைத்துச் சென்றீர்களோ?
எம் அருமை அம்மாவே ஏனம்மா எமை பிரிந்தீர்?
அப்பாவின் ஞாபகத்தில் அவரிடத்தில் சென்றீரோ?
நாம் இங்கு கதறுவது உங்களுக்கு கேட்கலையோ?
உங்கள் பிள்ளைகள் நாமிங்கு அநாதரவாய் ஆனோமே!
நெஞ்சமோ கனக்கிறது,
உறக்கமோ வர மறுக்கிறது,
உங்கள் உயிர் என்றென்றும் எங்களிடம் இருக்கிறது,
ஓம்!சாந்தி ஓம்!சாந்தி ஓம்!சாந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக