![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDfTw1WfjO5nIEXAmyx6_TJ2NZcAptWxqLqUzlrhCQ0oBm2S_eKl-aJwKCU23tWuksJGtnGUM5AxgqGRCZGas3GgwCx-ilas5oR_ZXBb_RU4Lovwf0FfCUjgexTvD0somMuXqCnF507As/s320/jaffnaprotest.gif)
ஏனிந்த உலகம் இப்படியானது?
மனிதத்தை விழுங்கியேமிருகமாய் ஆனது!
இதயமே இல்லையா-இருந்தால்அதிலே கருணையே இல்லையா?
இதயமே இல்லையா-இருந்தால்அதிலே கருணையே இல்லையா?
ஏனிந்த உலகம் இப்படியானது?
பேச்சிலே தெறிக்கும் ஜனநாயகம்செயலிலே மட்டும் ஏனற்றுப்போனது?எங்கள் தமிழினம் கோரமாய் மாண்டதே!
பேச்சிலே தெறிக்கும் ஜனநாயகம்செயலிலே மட்டும் ஏனற்றுப்போனது?எங்கள் தமிழினம் கோரமாய் மாண்டதே!
கேட்டதா எந்த உலக நாயாவது?
ஏனிந்த உலகம் இப்படியானது?
மக்களை ஏய்த்து அரசிலே அமர்ந்தவன்,
மக்களை ஏய்த்து அரசிலே அமர்ந்தவன்,
அப்பாவி ஜனங்களை பாடாய் படுத்துறான்,
தட்டிக்கேட்டால் தீவிரவாதி என்கிறான்,
துப்பாக்கி ஏந்தி தேடுதல் நடத்துறான்,
ஏனிந்த உலகம் இப்படியானது?
ஐ.நா.கூட பேருக்குத்தானோ?
ஐ.நா.கூட பேருக்குத்தானோ?
சர்வாதிகாரியின் உதவிக்குத்தானோ?
யாரிடம் போவோம்?
எப்படித்தெளிவோம்?
எமக்கு சுதந்திரம் எப்படி பெறுவோம்?
ஏனிந்த உலகம் இப்படியானது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக