பக்கங்கள்

02 பிப்ரவரி 2011

குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் சக்தி நாய்களுக்கு உண்டாம்!

மனிதர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை 90 சதவீதம் துல்லியமாக கண்டு அறியும் சக்தி நாய்களுக்கு உண்டு என்று மருத்துவ உலகம் கண்டுபிடித்து உள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம்.
எனவே மோப்ப சக்தியால் நாய் குடல் புற்று நோயை அடையாளம் கண்டு விடுகின்றது. நாய்களை கொண்டு இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். இதனால் நோயை குணப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.
வேறு உயிர்கொல்லி நோய்களை அடையாளம் காண கூடிய சக்தி நாய்களுக்கு உண்டா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக