பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2010

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி மானபங்கம்!


வேறு சாதி வாலிபரை காதலித்ததால், ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி, 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சிïட்டும் கொடூர சம்பவம், மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் சூரி பகுதியில் உள்ள செல்போன்களில், `ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மானபங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசி பெண், வேறு சாதி வாலிபரை காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த கொடூர காட்சியை அரங்கேற்றி உள்ளனர். ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின்னால் கூச்சலிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்த பெண்ணை விரட்டி வந்தனர். சில சிறுவர்கள் அந்த பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடைபெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டினார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த கோரக்காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது. 4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத சுட்டெரிக்கும் வெயிலில் கொடூரமான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந்தாலும், தற்போது செல்போனில் பரவியபின்னர்தான் அதுபற்றி வெளியே தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக சூரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த காட்சி பற்றி நிருபர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். அந்த இளம்பெண் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்ற விவரம் கூட உடனடியாக தெரியவில்லை. செல்போன் படத்தில் தெரியும் கிராமங்களின் அடையாளத்தை வைத்து போலீசார் ஓரளவுக்கு துப்பு துலக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக