பக்கங்கள்

23 அக்டோபர் 2010

4 படங்களில் நாயகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டேன் – ஐஸ்வர்யாராய்.

இருவர்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யாராய்.
ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன்” நான்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாக்கி விட்டதாக ஐஸ்வர்யாராய் கூறினார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ் படங்களில் நடிக்க எனக்கு மொழி பிரச்சி னையாக இல்லை. இருவர், ஜீன்ஸ் படங்களில் நடித்த போது கொஞ்சம் சிரமம் இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படத்தில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது. வசனங்களை புரிந்து கொண்டு தான் பேசுவேன்.
இருவர்” படத்தில் நடித்த போது புதுமுகமாகத் தான் இருந்தேன். இப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்து உள்ளது. நிறைய மொழி பேசும் மக்களை சந்தித்து விட்டேன். எல்லா மொழிகளுக்கும் மரியாதை கொடுக்கிறேன்.
ரஜினி எனக்கு ஆச்சரிய மாக தெரிகிறார். அவர் சூப்பர் ஸ்டார் ஆனாலும், அடக்கமாக இருக்கிறார். எளிமையாக தெரிகிறார். எல்லோரிடத்திலும் அன் பாக பழகுகிறார். அவருடன் “எந்திரன்” படத்தில் நடித் தது சந்தோஷ மாக இருக்கிறது.
எந்திரன் படத்தில் நடிப்பதற்கு நான் கஷ் டப்பட வில்லை. ஈஸியாக நடித்து இருந்தேன். ஆனால் இப்படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனை படமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக