பக்கங்கள்

20 அக்டோபர் 2010

அரைகுறை ஆடை… நசுக்கிய ரசிகர்கள்… கோபத்தில் ஸ்ரேயா!!

பொது இடங்களில் மிகமிகக் குறைச்சலான உடையில்தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போலிருக்கிறது.
ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் தம்மாத்துண்டு உடையோடு மேடையேறி, ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா.
ஆனாலும் அம்மணி தனது உடை விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதமாக கஞ்சத்தனம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிறுவனம், சென்னையில் தங்கள் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த ஸ்ரேயாவை அழைத்திருந்தது.
விஷயம் அறிந்ததும் ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக் குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. அந்த நேரம் பார்த்து மகா குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார் ஸ்ரேயா. அவ்வளவுதான்… நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தனர் ரசிகர்கள்.
விழா ஏற்பாட்டாளர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கிய ஸ்ரேயாவை சிலர் இழுக்கவும் கிள்ளவும் முயன்றனர். அவர்கள் பிடியில் தவித்தார் ஸ்ரேயா. ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா, திட்டிக் கொண்டே விழாவிலிருந்து பாதியில் வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக