பக்கங்கள்

20 ஏப்ரல் 2010

கனவு!



என் கனவுகளுக்கும் நிறமிருப்பதாய்ச் சொன்ன போதுகுறுக்கும் நெடுக்குமாய்கல்லறைகள் எழும்பின
கர்ப்பம் சுமக்க மட்டுமேகனவுகள்... என்றாகிபிரசவிக்க முடியாதுபிதற்றிக் கொண்டு முக்கோடி வருடங்கள்கடந்து வந்த சகோதரிகளுக்கு
இரத்தமும் சதையுமாய்உங்கள் குறைமாத்துக் குழந்தை போலாகாமல் விதைத்தவர்கள் தோட்டத்திலேயேநடக்க மறுத்தது என் கனவுகளின் கால்கள்
நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்என்று ஆற்றாதவர்அரிவாளோடும் அவர்களுக்கேயான பகற்கனவோடும்...
பயத்தின் சிரத்தைக்கொய்து எடுத்த பின் எனது கைவிலங்குகள்உடைக்கப்பட்டனசிறைக் கதவுகள்திறக்கப்பட்டன
ஒவ்வொரு விடியலிலும்திணிக்கப்படும் கனவை தின்று தணிக்கிறதுஎனது விழி
என் கனவின் நிறங்கள்கோர்த்தெடுத்துவானவில்லைத் தரையிறக்கிப்பரந்து வாழப்பாலம் கட்ட...இதோ எனது முதற் கல்.
நான் இதுதான்இப்படித்தான்என்றால் மட்டுமேசாத்தியமாகிறது.என் கனவு
ஆக்கம்:கவிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக