பக்கங்கள்

21 ஏப்ரல் 2010

பொங்கி வாடா!

தீயெழுந்து அடுப்பினிலே பாலைச்
சுட்டால்சினந்தெழுந்து
பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற
பொங்கல் வெற்றுநிகழ்வன்று....
வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல்
தமிழர் ஈழம்தனையிழந்து
சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு!
பொங்கி வாடா!
பகைநொறுக்கித்
தமிழீழ மண்ணை மீட்போம்!
திரைப்படத்தின் மார்புகளைத்
தின்னும் கண்ணால்தீந்தமிழ்த்தாய்
ஈழத்தில் சாவின்
வாயில்இரைப்படப்போய்
விழும்புலிகள் களத்தின்
புண்கள்இருந்த
மலை மார்புகளைப் பார்ப்பாய்!
ஆங்கேநிரைப்பட நாளும்
களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்?
வீழ்ந்துதரைப்பட நீ கிடக்கின்றாய்!
பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!
நேற்றுவரை உனக்குதவி நின்ற
மாட்டைநேர்நின்று மோதுகிறாய்....
தமிழீழத்தில்நாற்றிசையும்
குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்....
நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்!
தமிழனாய் நீபொங்கல் செய்!
விழித்தெழுவாய்!
வீறுகொண்டுகாற்றெழுந்தால்
புயலாகும்!
பொங்கி வாடா!
களம் காண்போம்!
தமிழீழம் காப்போம்! காப்போம்!
(காசி ஆனந்தன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக